

சென்னை,
“இந்தி சினிமாவில் பலர் என்னை வார்த்தையாலும், செயலாலும் மோசமாக நடத்தினர்” என்று நடிகை ரெஜினா கசாண்ட்ரா வெளிப்படையாக கூறியுள்ளார். சமீபத்திய பேட்டியில் அவர் பகிர்ந்த இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் கூறியதாவது, “நான் தென்னிந்திய நடிகையாக இருந்தாலும், எனக்கு மற்ற நடிகைகளைவிட இந்தியில் பேசவும், படிக்கவும், எழுதவும் தெரியும். எனக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரங்களை மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்து, கச்சிதமாக நடிக்கிறேன். இருந்தாலும் இப்படியாக நடத்தப்படுவது வேதனை தருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
ரெஜினாவின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. திரையுலகில் உள்ள பாகுபாடுகள் குறித்து மீண்டும் கவனம் திரும்பியுள்ள நிலையில், அவரது இந்த பேச்சு முக்கியத்துவம் பெற்றுள்ளது.