விஜய் தேவரகொண்டாவை பார்த்து பயந்த ராஷ்மிகா - எப்போது தெரியுமா?

'கீதா கோவிந்தம்' படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்க ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்தார்.
விஜய் தேவரகொண்டாவை பார்த்து பயந்த ராஷ்மிகா - எப்போது தெரியுமா?
Published on

சென்னை,

பரசுராம் பெட்லா இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் 'கீதா கோவிந்தம்'. இப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்க ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்தார். இப்படம் மட்டுமின்றி இதில் வரும் பாடல்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றன. விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா மந்தனா நடித்த முதல் படம் இதுவாகும்.

அதனைத்தொடர்ந்து, இருவரும் இணைந்து நடித்த படம் டியர் காம்ரேட். நடிகை ராஷ்மிகா மந்தனா கீதா கோவிந்தம் படத்தில் நடித்த பின்னர் அளித்த பேட்டியில் விஜய் தேவரகொண்டாவை பார்த்து பயந்ததாக கூறியுள்ளார்.

அது குறித்து அவர் பேசியதாவது, ஒரு புதிய நபரை பார்த்தால் ஒரு விதமான பயம் இருப்பது பொதுவான ஒன்றுதான். அதன்படி விஜய் தேவரகொண்டாவை பார்த்து முதலில் பயந்தேன். ஆனால், அவரிடம் ஒரு சாந்தநிலையை பார்த்தேன். அது அவருடன் வேலை செய்ய மிகவும் உதவியது. இவ்வாறு கூறினார்.

மேலும் ராஷ்மிகா, நடிகர் ரக்சித்தை பிரிந்தபோது விஜய் தேவரகொண்டா ஆறுதல் கூறியதாகவும், புதிய உலகத்தை நோக்கி செல்ல உதவியதாகவும் கூறினார். அந்த சமயத்தில், ரக்சித்துடனான பிரிவைப் பற்றி ராஷ்மிகாவிடம் தனிப்பட்ட கேள்விகளைக் கேட்க வேண்டாம் என்று விஜய் தேவரகொண்டா செய்தியாளர்களிடம் வெளிப்படையாகக் கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com