நடிகைகள் அதிக சம்பளம் ஏன் வாங்கக் கூடாது? - தமன்னா கேள்வி

நடிகைகள் அதிக சம்பளம் ஏன் வாங்கக் கூடாது என நடிகை தமன்னா கேள்வி எழுப்பி உள்ளார்.
நடிகைகள் அதிக சம்பளம் ஏன் வாங்கக் கூடாது? - தமன்னா கேள்வி
Published on

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார், தமன்னா. இவரை தெலுங்கில் ரவிதேஜா படத்தில் நடிக்க அணுகினர். ஆனால் அந்த படத்தில் நடிக்க அவர் அதிக சம்பளம் கேட்டதாகவும். அந்த தொகைக்கு பட நிறுவனம் உடன்படாததால் படத்தில் நடிக்க மறுத்து விட்டதாகவும் தகவல்கள் பரவின. இதற்கு விளக்கம் அளித்து தமன்னா கூறியதாவது:-

என்னை பற்றி கற்பனையான தகவல்கள் பரவி உள்ளன. படத்தில் நடிப்பது குறித்து எனது மேலாளரிடம் படக்குழுவினர் பேசினர். ஆனால் கொரோனா பிரச்சினையால் பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது. இப்போது எந்த பட நிறுவனமும் படப்பிடிப்புக்கு தயாராகவில்லை.

ரவிதேஜாவுடன் எனக்கு நல்ல நட்பு உள்ளது. எனவே அவரது படத்தை ஒதுக்க வேண்டிய தேவை இல்லை. சம்பளம் என்பது நடிகர்களின் தனிப்பட்ட விஷயம். குறிப்பிட்ட சம்பளத்தை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பத்தை பொறுத்தது. நடிகைகள் சம்பளத்தை குறைத்துவிட்டு கொடுக்க வேண்டும் என்று பேசுவது ஏற்புடையது அல்ல. ஒருதலைபட்சமானது. இதே கேள்வியை நடிகரிடம் கேட்பது இல்லை. நடிகைகள் குறிப்பிட்ட நிலையை அடைய கஷ்டப்பட்டு உழைத்து இருக்கிறார்கள். கதாநாயகனை போலவே கதாநாயகியும் படத்துக்கு தேவை. நடிகைகள் அதிக சம்பளம் ஏன் வாங்க கூடாது? ஆண்கள் மட்டும்தான் அதிக சம்பளம் வாங்க வேண்டுமா?

இவ்வாறு தமன்னா கேள்வி எழுப்பி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com