‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்த விவகாரம்: கமல்ஹாசன் கண்டனம்

திருட்டுப் பிரதி என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்த விவகாரம்: கமல்ஹாசன் கண்டனம்
Published on

சென்னை,

நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் இணையதளத்தில் வெளியானதில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கண்டனம் தொவித்துள்ளார். இது குறித்து அவர் 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள கருத்து வருமாறு:-

“ஜனநாயகன் திரைப்படம் கசிந்தது ஒரு விபத்து அல்ல - அது ஒரு அமைப்பு ரீதியான தோல்வியின் விளைவு. உரிய சட்ட நடைமுறைகள் சரியான நேரத்தில் பின்பற்றப்பட்டிருந்தால், நாம் இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டோம். சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட அளவுக்கதிகமான தாமதங்கள், திருட்டுப் பிரதிகளுக்கு ஒரு சாதகமான சூழலை உருவாக்கின. சட்டப்பூர்வமான அணுகல் தடைபடும்போது, சட்டவிரோத வழிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன.

திருட்டுப் பிரதி என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது. அது கலை மற்றும் கலைஞர் மீதே தொடுக்கப்படும் ஒரு தாக்குதல். அமைப்பு தோல்வியடையும் போது படைப்பாளியை யார் பாதுகாப்பார்கள்? நமக்கு பொறுப்புக்கூறல், விரைவான சான்றிதழ் வழங்குதல், கடுமையான அமலாக்கம் மற்றும் நிகழ்நேர நீக்கங்கள் தேவை.

கடந்த காலத்தில் நீங்கள் எனக்குத் துணையாக நின்றதைப் போல, உண்மையான சினிமா ரசிகர்கள் ஒன்றிணைந்து, சட்டப்பூர்வமாக திரையரங்குகளில் இப்படத்தைப் பார்த்து தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.”

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com