

சென்னை,
தெலுங்கு ஹீரோ ஆதி சாய்குமார் பல வருடங்களுக்குப் பிறகு ஒரு வெற்றி படத்தை பெற்றிருக்கிறார். அவருக்கு வெற்றியைக் கொடுத்த படம் ஷம்பாலா. இந்தப் படத்தை, புது இயக்குநர் யுகந்தர் முனி இயக்கியுள்ளார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்த இந்தப் படம், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
கதை வழக்கமானதாக இருந்தாலும், அதை இயக்கிய விதம் மிகவும் புதியதாக இருந்தது. அதனால் இந்தப் படத்துடன் பார்வையாளர்கள் இணைக்கப்பட்டனர்.
சுமார் ரூ.15 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், ரூ.20 கோடிக்கு மேல் வசூலித்து, ஆதி சாய்குமாரின் கெரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
இப்போது இந்தப் படம் ஓடிடி பார்வையாளர்களை மகிழ்விக்கத் தயாராகி உள்ளது. ஷம்பாலா படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனமான ஆஹா வாங்கியுள்ளது. இந்நிலையில், ஷம்பாலா படத்தின் ஓடிடி ஸ்ட்ரீமிங் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, வருகிற 22ம் தேதி முதல் இப்படம் ஆஹாவில் வெளியாக உள்ளது.