

‘மொத ராத்திரி’ திரைப்படம் வரும் 18-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. திரையரங்குகளில் படத்தை பார்க்கத் தவறியவர்கள், இனி வீட்டிலிருந்தபடியே ஓடிடியில் படத்தை பார்க்கலாம்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘மொத ராத்திரி’. ராஜா கருப்பசாமி இயக்கிய இப்படத்தில் ரிஷிகாந்த் கதாநாயகனாகவும், அனிஷ்மா அனில்குமார் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். சேத்தன், ஏ.வெங்கடேஷ், பகவதி பெருமாள், ஷெல்லி கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட கிராமப் பின்னணியில் நடைபெறும் இப்படத்தின் கதை, புதிதாக திருமணமான தம்பதியின் முதல் இரவில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை மையமாகக் கொண்டது.
திருமணத்தில் ஆர்வமில்லாமல் இருந்த இருவர் எதிர்பாராத சூழலில் திருமண பந்தத்தில் இணைகின்றனர். அதன்பிறகு ஒரே இரவில் அவர்களது வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை காதல் மற்றும் நகைச்சுவையுடன் சொல்லும் படமாக ‘மொத ராத்திரி’ உருவாகியுள்ளது.
திரையரங்குகளில் வெளியான இப்படம் தற்போது ஓடிடி வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. அதன்படி, ‘மொத ராத்திரி’ திரைப்படம் வரும் 18-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. திரையரங்குகளில் படத்தை பார்க்கத் தவறியவர்கள், இனி வீட்டிலிருந்தபடியே ஓடிடியில் படத்தை பார்க்கலாம்.