கார் மரத்தில் மோதி 11-ம் வகுப்பு மாணவர், நண்பா பலி

அம்பர்நாத்தில் கார் மரத்தில் மோதி 11-ம் வகுப்பு மாணவன், நண்பருடன் பலியானார்.
கார் மரத்தில் மோதி 11-ம் வகுப்பு மாணவர், நண்பா பலி
Published on

தானே, 

அம்பர்நாத்தில் கார் மரத்தில் மோதி 11-ம் வகுப்பு மாணவன், நண்பருடன் பலியானார்.

அன்பளிப்பு கார்

தானே மாவட்டம் உல்லாஸ்நகர் கோல் மைதானம் பகுதியை சேர்ந்தவர் மானவ் தர்வானி(வயது17). 11-ம் வகுப்பு மாணவர். இவரின் அக்காள் சமீபத்தில் பெற்றோருக்கு கார் ஒன்றை அன்பளிப்பாக கொடுத்தார். சம்பவத்தன்று இரவு அக்காள், பெற்றோருக்கு அன்பளிப்பாக கொடுத்த புதிய காரை எடுத்து கொண்டு மாணவர் உல்லாச சவாரி சென்றார். அவர் பெற்றோருக்கு தெரியாமல் காரை எடுத்து சென்றதாக தாகிறது. மாணவர், தனது நண்பன் குசாலுடன் (18) அம்பர்நாத் நேக்கி காரில் சென்றார். கார் அம்பர்நாத் பகுதியில், உல்லாஸ்நகர்- அம்பர்நாத் ரோட்டில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது. மோதிய வேகத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது.

2 பேரும் பலி

இந்த பயங்கர விபத்தில் காரை ஓட்டிச்சென்ற மானவ் தர்வானி மற்றும் அவரது நண்பன் குசால் படுகாயமடைந்தனர். போலீசார் பொதுமக்கள் உதவியுடன் வாலிபர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு வாலிபர்களை பரிசோதித்த டாக்டர் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினார். சம்பவம் குறித்து அம்பர்நாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோருக்கு பரிசாக கிடைத்த காரில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் வாலிபர், நண்பருடன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com