இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டித்து, நாமக்கல்லில் கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டித்து நாமக்கல்லில் கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டித்து, நாமக்கல்லில் கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

நாமக்கல்,

ஈஸ்டர் பண்டிகை அன்று இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் ஓட்டல்களில் நடந்த குண்டுவெடிப்பில் 290-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று நாமக்கல் கிறிஸ்து அரசர் தேவாலயம் முன்பு கிறிஸ்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பாதிரியார் ஜான் அல்போன்ஸ் தலைமை தாங்கினார். இதில் உதவி பாதிரியார் அருள்சுந்தர் மற்றும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை கைது செய்யக்கோரி சிறிது நேரம் கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com