கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி

இந்திராநகர் தொகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை ஏ.கே.டி. ஆறுமுகம் தொடங்கி வைத்தார்.
கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி
Published on

புதுச்சேரி

இந்திராநகர் தொகுதிக்குட்பட்ட காமராஜர் நகர் வ.உ.சி. வீதியில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.4 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்க பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

தொகுதி எம்.எல்.ஏ.வும் அரசு கொறடாவுமான ஏ.கே.டி. ஆறுமுகம் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இதில் பொதுமக்கள் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com