தர்மபுரி மாவட்டத்தில் மேலும் 351 பேருக்கு கொரோனா - ஒருவர் உயிரிழப்பு

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று மேலும் 351 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் நேற்று உயிரிழந்தார்.
தர்மபுரி மாவட்டத்தில் மேலும் 351 பேருக்கு கொரோனா - ஒருவர் உயிரிழப்பு
Published on

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சளி, காய்ச்சல், இருமல் பாதிப்பு உள்ளவர்களுக்கு பரிசோதனை முகாம்களும் மாவட்டம் முழுவதும் நடந்து வருகின்றன.

இந்தநிலையில் நேற்று மாவட்டத்தில் புதிதாக 351 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்த தொற்று கண்டறியப்பட்டவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே 2,934 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 266 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். இந்த நிலையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட மேலும் 351 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,018 ஆக அதிகரித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 97 பேர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com