பேரம்பாக்கத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி: 5 கி.மீ தொலைவுக்குள் உள்ள கிராமங்களின் எல்லைகள் மூடல் - மாவட்ட கலெக்டர் தகவல்

பேரம்பாக்கத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 5 கிலோமீட்டர் தொலைவில் அடங்கிய கிராமங்களின் எல்லைகள் மூடப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
பேரம்பாக்கத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி: 5 கி.மீ தொலைவுக்குள் உள்ள கிராமங்களின் எல்லைகள் மூடல் - மாவட்ட கலெக்டர் தகவல்
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் பேரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவர், டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு கடந்த மாதம் 24-ந் தேதி தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

இந்தநிலையில் அவருக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்த காரணத்தால், கடந்த 1-ந் தேதியன்று திருவள்ளூர் அடுத்த பூதூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரது ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

எல்லைகள் முடல்

எனவே அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையில் தானே முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

இதன் காரணமாக பேரம்பாக்கம் ஊராட்சி மற்றும் அதனை சுற்றி உள்ள 5 கிலோமீட்டர் தொலைவில் அடங்கிய கிராம ஊராட்சிகளின் எல்லைகள் மூடப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேற்கண்ட தகவல் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com