

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 30 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 2,588 ஆக உயர்ந்துள்ளது. இதில் 24 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். 2,411 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 153 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.