நாமக்கல் மாவட்டத்தில், ஒரே நாளில் 8,584 பேருக்கு கொரோனா தடுப்பூசி சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், ஒரே நாளில் 8,584 பேருக்கு கொரோனா தடுப்பூசி சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில், ஒரே நாளில் 8,584 பேருக்கு கொரோனா தடுப்பூசி சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
Published on

நாமக்கல்:

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை நடந்த 19 மாபெரும் தடுப்பூசி முகாம்களில் 7 லட்சத்து 13 ஆயிரத்து 216 பேர் தடுப்பூசி செலுத்தி பயன் பெற்றுள்ளனர்.

இதற்கிடையே நேற்று 20-ம் கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் 478 மையங்களில் நடைபெற்றது. இம்முகாம் பணிகளில் டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட சுமார் 5 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் நேற்று ஒரே நாளில் 8,584 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com