

சபரிமலை,
மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் கோயிலுக்கு வருவர்கள். இந்த நிலையில், தமிழ் ஆடி மாதம் மற்றும் மலையாள கர்கிடகம் மாதப் பிறப்பை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 21-ந் தேதி வரை 5 நாட்கள் வழக்கமான மாத பூஜை வழிபாடுகள் நடைபெற உள்ளது. சாமி தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருகிறது.