கோப்புப்படம்
கோப்புப்படம்

திருச்செந்தூர் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 4 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து சாமி தரிசனம்

விடுமுறை தினத்தையொட்டி திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகமாக காணப்படுகிறது.
Published on

தூத்துக்குடி,

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகாரத் தலமாகவும், ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். திருவிழா மற்றும் சில முக்கிய தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

Also Read
சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் 'எல்' வடிவ மேம்பாலம்: மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
கோப்புப்படம்

இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மற்றும் மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகமாக காணப்படுகிறது. அதிகாலை முதலே கோவிலில் குவிந்த பக்தர்கள், கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி சுமார் 4 மணி நேரத்துக்கும் மேல் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Also Read
ஆர்.எம். வீரப்பன் மகன் மறைவு: ரஜினிகாந்த் இரங்கல்
கோப்புப்படம்
X

Daily Thanthi
www.dailythanthi.com