ஆறுபடை வீடு கொண்ட ஐயப்பன்

எருமேலியில் மகிஷியை ஐயப்ப சுவாமி வதம் செய்தார். இங்கு ஐயப்பன் தர்ம சாஸ்தாவாக காட்சி தருகிறார்.
முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடுகள் இருப்பது போல, ஐயப்ப சுவாமிக்கும் ஆறுபடை வீடுகள் உண்டு.
பந்தளம்:- சபரிமலைக்குச் செல்லும் வழியில் உள்ளது பந்தளம். இங்கு ஐயப்பன், மணிகண்ட பாலகனாக நின்ற நிலையில் தரிசனம் தருகிறார். இங்குள்ள விக்ரகம் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும்.
குளத்துபுழா:- பாலகனாக ஐயப்பன் காட்சி தருகிறார்.
எருமேலி:- இங்கு எருமை முகத்துடன் திரிந்த மகிஷியின் மீது நின்று அவளை வதம் செய்தார். இங்கு ஐயப்பன் வில், அம்புகளுடன் தர்ம சாஸ்தாவாக காட்சிதருகிறார். இங்கு ஐயப்பசாமியின் தோழர் வாவர் பள்ளிவாசல், கோட்டை கருப்புசாமி கோவில்கள் உள்ளன.
அச்சன்கோவில்:- இங்கு சுவாமி, வன அரசனாக காட்சி தருகிறார்.
ஆரியங்காவு:- இங்கு சாஸ்தா பூர்ணா, புஷ்கலா தேவியர்களுடன் கல்யாண கோலத்தில் காட்சி தருகிறார்.
சபரிமலை: சபரி பீடமே சபரி மலையானது.
Related Tags :
Next Story






