விடுமுறை தினம்: திருச்செந்தூரில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்

விடுமுறை தினமான இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது.
விடுமுறை தினம்: திருச்செந்தூரில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்
Published on

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். அதேபோல் திருவிழா மற்றும் சில முக்கிய தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

அவ்வகையில் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு இன்று பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. திரளான பக்தர்கள் அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி சுமார் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் இன்று முகூர்த்த தினம் என்பதால் கோவில் சண்முக மண்டபம் மற்றும் கோவில் வளாகங்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன.

இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com