திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3½ கோடி - தேவஸ்தானம் தகவல்


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3½ கோடி - தேவஸ்தானம் தகவல்
x

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 47 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து இரவு 7 மணி வரை 47 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்துக்கு 24 மணிநேரம் ஆனது.

நேற்று முன்தினம் 79 ஆயிரத்து 100 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 32 ஆயிரத்து 791 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 52 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story