பரமத்திவேலூர்: அம்மன்-சிவன் கோவில்களில் பௌர்ணமி சிறப்பு வழிபாடு


பரமத்திவேலூர்: அம்மன்-சிவன் கோவில்களில் பௌர்ணமி சிறப்பு வழிபாடு
x

சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன்

சிறப்பு பூஜைகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அதேபோல் பரமத்தி வேலூர் பால ஐயப்பன் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் ஆலயம் மற்றும் பழைய காசிவிஸ்வநாதர் கோவில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், பரமத்தி அருகே உள்ள மாவுரெட்டி வேதநாயகி சமேத பீமேஸ்வரர், பரமத்திவேலூர் செட்டியார் தெருவில் உள்ள எல்லையம்மன் கோயிலில் எழுந்தருளியுள்ள ஏகாம்பரேஸ்வரர், வல்லப விநாயகர் கோயிலில் எழுந்தருளியுள்ள பானலிங்கேஸ்வரர், பிலிக்கல்பாளையம்,

கரட்டூர் விஜயகிரி வடபழனியாண்டவர் கோயிலில் எழுந்தருளியுள்ள மருந்தீஸ்வரர் கோயில், நன்செய் இடையாறு மாரியம்மன், பரமத்தி வேலூர் மாரியம்மன், செல்லாண்டி அம்மன், பேட்டை புது மாரியம்மன், பரமத்தி அங்காளம்மன், நன்செய் இடையாறு கொல்லிமலை மாசி பெரியண்ணசாமி கோவில் நன்செய்இடையாறு காவிரி ஆட்டம் வரையில் உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பணசாமி கோவிலில் உள்ள பொன்னாச்சிஅம்மன், பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதி அம்மன்,

கொந்தளம் மாரியம்மன், சேளூர் மாரியம்மன், அய்யம்பாளையம் பகவதி அம்மன், குன்னத்தூர் மாரியம்மன், ஆனங்கூர் மாரியம்மன், பகவதி அம்மன், செல்லாண்டியம்மன், வடகரையாத்தூர் மாரியம்மன், பகவதி அம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

1 More update

Next Story