பங்குனி மாத பூஜைகளுக்காக நாளை சபரிமலை கோவில் நடை திறப்பு

மாதாந்திர பூஜைகளுக்காக பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளது.
பங்குனி மாத பூஜைகளுக்காக நாளை சபரிமலை கோவில் நடை திறப்பு
Published on

சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவி​லில் ஒவ்​வொரு மலை​யாள மாதத்​தின் தொடக்​கத்​தி​லும் 5 நாட்​கள் வழி​பாடு நடை​பெறு​வது வழக்​கம். இதன்​படி மீனம் மாத (பங்​குனி) பூஜைக்​காக நாளை மாலை 5 மணிக்கு நடை திறக்​கப்பட உள்​ளது. தந்​திரி கண்​டரரு மகேஷ் மோக​னரு தலை​மை​யில் மேல்​ சாந்தி பிர​சாத் நம்​பூ​திரி நடையை திறப்​பார். அன்று சிறப்பு பூஜைகள் எது​வும் நடை​பெறாது.

நாளை மறு​நாள் (மார்ச் 15-ம் தேதி) அதி​காலை முதல் 19-ம் தேதி வரை கணபதி ஹோமம், நிர்​மால்ய பூஜை, படிபூஜை உள்​ளிட்ட பல்​வேறு வழி​பாடு​கள் நடை​பெறும். பூஜைகள் நிறைவடைந்து மார்ச் 19ம் தேதி இரவு நடை அடைக்கப்படும். தொடர்ந்து பங்குனி உத்திர திருவிழாவுக்காக மார்ச் 22ம் தேதி மாலை சபரிமலை நடை திறக்கப்பட்டு மறுநாள் கொடியேற்றத்துடன் திருவிழா கோலாகலமாக தொடங்குகிறது.

ஆன்​லைன் முன்​ப​திவு மூலமே பக்​தர்​கள் தரிசனத்​துக்கு அனு​ம​திக்​கப்​படு​வர். எனவே பக்​தர்​கள் தங்​களுக்​கான தரிசன தேதியை முன்​ப​திவு செய்து சபரிமலைக்கு வர வேண்​டும் என்று தேவசம்போர்டு தெரிவித்​துள்​ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com