

சென்னை,
சென்னை, வடபழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக பிரமோற்சவ திருவிழா வெகு விமர்சையாக நடந்து வருகிறது. அந்தவகையில் நடப்பாண்டு திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று (வியாழக்கிழமை) காலை 7.35 மணிக்கு நடக்கிறது.
தொடர்ந்து, வருகிற 27-ந்தேதி காலை 7.05 மணிக்க மேல் 7.25 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. வருகிற 30-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் தீர்த்தவாரி கலசாபிஷேகமும், மாலை 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அன்று இரவு மயில் வாகனத்தில் சாமி வீதி உலா நிகழ்ச்சியும் கொடியிறக்கமும் நடக்கிறது.
இதையடுத்து 31-ந்தேதி இரவு 7 மணிக்கு விசேஷ புஷ்ப பல்லக்கில் சாமி புறப்பாடும் நடக்கிறது. வைகாசி விசாக உற்சவத்தையொட்டி தினசரி காலை மற்றும் இரவு நேரங்களில் சூழிய பிரபை, சந்திரபிரபை, மங்களகிரி விமானம், ஆட்டுக்கிடா, யானை, குதிரை, உள்ளிட்ட வாகனங்களில் சாமி புறப்பாடு நடக்கிறது.