சூர்யா படத்தின் அப்டேட்டை கொடுத்த இயக்குனர் பாண்டிராஜ்

சூர்யாவை வைத்து எதற்கும் துணிந்தவன் படத்தை இயக்கி வரும் பாண்டிராஜ், அப்படத்தை பற்றிய புதிய அப்டேட்டை தனது சமூக வலைத் தளத்தில் பதிவு செய்து இருக்கிறார்.
சூர்யா படத்தின் அப்டேட்டை கொடுத்த இயக்குனர் பாண்டிராஜ்
Published on

ஜெய் பீம் படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் எதற்கும் துணிந்தவன். பாண்டிராஜ் இயக்கி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இப்படம் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திரைக்கு வருகிறது.

இந்நிலையில் தற்போது இயக்குனர் பாண்டிராஜ் தனது சமூக வலைத் தளத்தில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்து விட்டது. சூர்யா, ஒளிப்பதிவாளர் ரத்னவேலு மற்றும் படக்குழுவினருக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. எதற்கும் துணிந்தவன் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com