குடிநீர் கேட்டு 2 இடங்களில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல்

ஆத்தூரில், குடிநீர் கேட்டு 2 இடங்களில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடிநீர் கேட்டு 2 இடங்களில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல்
Published on

ஆத்தூர்,

ஆத்தூர் நகராட்சி 27-வது வார்டு ஜோதிநகர் பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு 15 நாட்களாக குடிநீர் வரவில்லை எனக்கூறியும், குடிநீர் கேட்டும் ஆத்தூர் காமராஜனார் ரோட்டில் நேற்று காலை காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது ரோந்து பணியில் இருந்த போலீசார், இங்கு சாலை மறியல் செய்யக்கூடாது. இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் முறையிட்டு தீர்வு காணுங்கள் எனக்கூறினர். இதையடுத்து பொதுமக்கள் சமாதானமாகி கலைந்து சென்றனர். இந்த சாலைமறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com