

சென்னை,
சென்னை ஐ.ஐ.டி.யின் டிஜிட்டல் கற்றல் தளமான ஸ்வயம் பிளஸ், சென்னை ஐ.ஐ.டி. பிற வர்த்தகத்துடன் இணைந்து அனைவருக்குமான செயற்கை நுண்ணறிவு பிரசாரத்தின் கீழ் 3 புதிய செயற்கை நுண்ணறிவு பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஸ்வயம் பிளஸ் செயல்பாட்டுக்கு வந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் இந்த பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
வளர்ந்து வரும் என்ஜினீயர்களுக்கான செயற்கை நுண்ணறிவு, நிர்வாகிகளுக்கான செயற்கை நுண்ணறிவு, என்ஜினீயரிங் தூண்டல் ஆகிய இந்த 3 பாடப்பிரிவுகள் தொடக்க நிலையில் கற்போருக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இதனை கற்க கோடிங் அல்லது செயற்கை நுண்ணறிவு குறித்த அனுபவம் எதுவும் தேவையில்லை.
வெவ்வேறு கல்வி, தொழில் பின்னணியுடைய கற்போருக்காக ஆரம்பிக்கப்பட்டு இருக்கும் இந்த பாடப்பிரிவுகள் செயற்கை நுண்ணறிவின் நடைமுறை பயன்பாடுகளில் கவனம் செலுத்தும் விதமாக சென்னை ஐ.ஐ.டி. நிபுணர்களால் கற்பிக்கப்படுகின்றன. இந்த பாடப்பிரிவுகளை சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி தொடங்கி வைத்தார்.
http://swayam-plus.swayam2.ac.in/ai-for-all-courses என்ற இணையதளத்தில் அடுத்த மாதம் (மே) 10-ந்தேதிக்குள் இந்த பாடப்பிரிவுகளில் சேர விண்ணப்பிக்கலாம்.