கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது

அடுத்த மாதம் (ஜூன்) 17-ந்தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது
Published on

தமிழ்​நாடு கால்​நடை மருத்​துவ அறி​வியல் பல்​கலைக்​கழகத்​தின் கீழ் சென்​னை, நாமக்​கல், திருநெல்​வேலி, ஒரத்​த​நாடு, சேலம் தலை​வாசல், உடுமலைப்​பேட்​டை, தேனி வீர​பாண்டி ஆகிய 7 இடங்​களில் கால்​நடை மருத்​து​வக் கல்​லூரி​கள் உள்​ளன. இந்த கல்​லூரி​களில் ஐந்​தரை ஆண்​டு​கள் கொண்ட கால்​நடைமருத்​து​வம் மற்​றும் பராமரிப்பு படிப்​புக்கு 660 இடங்​கள் இருக்​கின்​றன.

இதில், அகில இந்​திய ஒதுக்​கீட்​டுக்கு இடங்​கள் 15 சதவீதம் ஒதுக்​கப்​படு​கின்​றன. இந்த படிப்​பு​களுக்கு பிளஸ்2 மதிப்​பெண் அடிப்​படை​யில் மாணவர் சேர்க்கை நடை​பெறுகிறது என்று தமிழ்​நாடு கால்​நடை மருத்​துவ அறி​வியல் பல்​கலைக்​கழகம் தெரி​வித்​துள்​ளது. மேலும் 7.5 சதவீத உள் இடஒதுக்​கீட்​டின் கீழ் அரசு பள்ளி மாணவர்​களுக்கு பி.​வி.எஸ்சி - ஏ.ஹெச் மற்​றும் பி.டெக் படிப்​பு​களில் 100-க்​கும் மேற்​பட்ட இடங்​கள்​ ஒதுக்​கீடு செய்​யப்​படு​கின்​றன.

இதற்கான விண்ணப்ப பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. மாணவர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளம் காலை 10 மணி முதல் அடுத்த மாதம் (ஜூன்) 17-ந்தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com