

சென்னை,
கேட் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்காக தேதி மாற்றப்பட்டுள்ளது.
நாடு முழுதும் உள்ள மத்திய உயர் கல்வி நிறுவனங்களான - ஐ.ஐ.டி., என்.ஐ.டி.,க்களில், முதுநிலை இன்ஜினியரிங் படிப்பில் சேர, 'கேட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். 2027-ம் ஆண்டுக்கான, 'கேட்' நுழைவு தேர்வை, சென்னை ஐ.ஐ.டி. நடத்துகிறது. தேர்வு, 2027, பிப்ரவரி 6, 7, 13, 14, 20, 21-ம் தேதிகளில் நடக்கிறது.
இதற்கான விண்ணப்பப் பதிவு நேற்று முன்தினம் 14ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 21ம் தேதி வரை நடக்கும். என்று அறிவிக்கப்பட்டது. தற்போது, விண்ணப்பப் பதிவு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வருகிற 27 -ந் தேதி முதல் செப்., 27 -ந்தேதி வரை ‘ கேட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அபராத கட்டணத்துடன் அக்டோபர் 5-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை ஐ.ஐ.டி தெரிவித்துள்ளது.