மத்திய அரசு நிறுவனத்தில் வேலை: ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மொத்தம் 268 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை: ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
Published on

புதுடெல்லி,

நால்கோ எனப்படும் தேசிய அலுமனிய நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. மத்திய சுரங்க துறைகள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த நிறுவனத்தில் காலியாக உள்ளபணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு:

பணி நிறுவனம்: தேசிய அலுமினிய நிறுவனம் (நால்கோ)

பணி இடங்கள்: 268

பதவி: டெக்னீஷியன், ஆபரேட்டர், போர்மேன் மற்றும் திறன் மேம்பாட்டு செய்முறைப் பயிற்சியாளர்

வயது: 10-6-2026 அன்றைய தேதிப்படி டெக்னீஷியன், ஆப்பரேட் டர் பதவிகளுக்கு 35 வயது, போர்மேன் பதவிக்கு 40 வயது, திறன் மேம்பாட்டு செய்முறைப் பயிற்சியாளர் பதவிக்கு 27 வயது. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு.

கல்வி தகுதி:10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.எஸ்சி.

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, திறனறி தேர்வு, ஆவண சரிபார்ப்பு.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10-6-2026.

இணையதள முகவரி: https://mudira.nalcoindia.co.in/rec_portal/default.aspx

X

Daily Thanthi
www.dailythanthi.com