

மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான தென்கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பது பற்றிய விவரங்கள் பின்வருமாறு:
பணி நிறுவனம்: தென்கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனம் (எஸ்.இ.சி.எல்)
பணி இடங்கள்: 1,055
பதவி: மைனிங் சிதார் டி அண்ட் எஸ் கிரேடு சி, அசிஸ்டெண்ட் போர்மேன் (எலெக்ட்ரிக்கல்) கிரேடு சி, துணை சர்வேயர் டி அண்ட் எஸ் கிரேடு சி (மைனிங்)
கல்வி தகுதி: டிப்ளமோ, பி.இ., பி.டெக்.
வயது: 8-4-2026 அன்றைய தேதிப்படி 18 முதல் 30 வயதுக்குட் பட்டவர்கள். அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வும் உண்டு (மாற்றுத்திறனாளிகள் உள்பட).
தேர்வு முறை: கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14-5-2026
மேலும் விவரங்களுக்கு: https://secl-cil.in/jobs_secl