

சென்னை,
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்பாக்கம் நகரில் வங்காள விரிகுடா கடற்கரையை அணுமின் நிலையம் உள்ளது. மத்திய அணுசக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த அணுமின் நிலையத்தில் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்ற விவரங்கள் வருமாறு:
பணி விவரம்: மெக்கானிக்கல், சிவில், பிட்டர், வெல்டர், எலக்ட்ரிக்கல், பைனான்ஸ் அக்கவுன்ட்ஸ், எச்.ஆர்., உள்ளிட்ட பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன்.
மொத்த எண்ணிக்கை : ஐடிஐ 124, டிப்ளமோ 18, பட்டப்படிப்பு 16 என மொத்தம் 158 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஐ.டி.ஐ.,/டிப்ளமோ / டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 18 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு
ஊதியம்: மாதம் ரூ. 9,600 - 10,900 வரை
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசிநாள்: 30.6.2026
கூடுதல் விவரங்களுக்கு: npcil.nic.in