

நாட்டில் உள்ள முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் சிந்து வங்கியில் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுபற்றிய விவரங்கள் வருமாறு:
பணியிடங்கள்: 635 இடங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 20 இடங்கள் காலியாக உள்ளன.
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
வயது வரம்பு : 20- வயது முதல் 28 வயதுக்குள்
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு
ஊதியம்: மாதம் ரூ. 12,300
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200 ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100
விண்ணப்பிக்க கடைசிநாள்: 06.06.2026
கூடுதல் விவரங்களுக்கு : punjabandsind.bank.in