மத்திய உளவுத்துறையில் வேலை: 3,717 பணியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?

உளவுத்துறையில் காலியாக உள்ள 3,717 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
representation image (Meta AI)
representation image (Meta AI)
Published on

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உளவுத்துறை நாட்டின் பாதுகாப்புக்கு மிக முக்கியமான அமைப்புகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. உளவுத்துறையில் காலியாக உள்ள 3,717 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:

பதவியின் பெயர்: உதவி மத்திய புலனாய்வு அதிகாரி (ACIO) Grade 2

காலிப்பணியிடங்கள்: 3,717

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருந்தால் போதும். கணிணி பற்றிய அடிப்படை அறிவு அவசியம்.

வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு சலுகை அளிக்கப்படும்.

சம்பளம்: ரூ. Rs.44,900 1,42,400 வரை

தேர்வு முறை: இரண்டு கட்ட எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வர்க தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வுக்கட்டணம்: ரூ.650 ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.550 கட்டணம் ஆகும்.

விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 19.07.2025, அவகாசம் முடியும் நாள்; 10.08.2025

அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வு அறிவிப்பினை பார்க்க: https://www.mha.gov.in/en/notifications/vacancies

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com