108 ஆம்புலன்ஸ் டிரைவர், உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு

ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி , மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகிய பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது.
108 ஆம்புலன்ஸ் டிரைவர், உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ், 102 ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி , மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகிய பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ், 102 ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி ஆகியவற்றில் டிரைவர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகிய பணிகளுக்கு ஆட்கள் தேர்வு வரும் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. 6-ந் தேதி ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 7-ந் தேதி பார்த்திபனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் நடைபெற உள்ளது. சுகாதார நிலைய வளாகத்தில் 7ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது

ஓட்டுநர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 24 வயதுக்கு மேலும் 35 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். 162.5 சென்டிமீட்டர் உயரத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓர் ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். தேர்வு பெற்றவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.21ஆயிரத்து 120 வழங்கப்படும். தேர்வு முறையானது எழுத்து தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, மனிதவளத்துறை நேர்காணல், கண் பார்வை திறன் மற்றும் மருத்துவம் சம்பந்தபட்ட தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வு ஆகியவை நடத்தப்படும். இவை அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்கள் 10 நாட்களுக்கு முறையான வகுப்பறை பயிற்சி வழங்கப்படும் பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்.

மருத்துவ உதவியாளருக்கு பி.எஸ்.சி. நர்சிங், ஜிஎன்.எம். ஏ.என்.எம், டிஎம்எல்டி ஆகியவை 12-ம் வகுப்பிற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும். அல்லது பி.எஸ்.சி. வாழ்க்கை அறிவியல், விலங்கியல், தாவரவியல், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி இதில் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். மாதம் ஊதியம் ரூ.21ஆயிரத்து 320 வழங்கப்படும். நேர்முகத் தேர்வு அன்று 19 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். தேர்வு முறையானது எழுத்துத் தேர்வு, மருத்துவ நேர்முகம், உடற்கூறியல், முதலுதவி அடிப்படை செவிலியர் பணி தொடர்பானவை, மனிதவளத்துறையின் நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப்படும்.

இத்தேர்வுகளில் தேர்வு செய்யப்பட்டவர்கள் 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும் இதுதவிர, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியர் அல்லது எம்.பி.ஏ படித்திருக்க வேண்டும். விண்ணப்ப தேதியில் 35 வயது மிகாமல் இருக்கவேண்டும். 2 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்கவேண்டும் , தகுதிக்கேற்ற சம்பளம் வழங்கப்படும். மேற்கூறிய பதவிகளுக்கு தகுதிகள் இருப்பின் அனைத்து ஒரிஜினல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் மேற்கூரிய நாட்களில் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com