ரேஷன் கடை ஊழியர்கள் பணிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

இதுவரை சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரேஷன் கடை ஊழியர்கள் பணிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
Published on

சென்னை,

தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்கள் என 3 ஆயிரத்து 308 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த அக்டோபர் 9-ந் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும்.

இதற்காக மாவட்டங்கள் தோறும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு இணையதளம் வழியாக விண்ணப்பிக்கப்பட வேண்டும். இதில், ரேஷன் கடை விற்பனையாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 12-ம் வகுப்பு கல்வித் தகுதியும், கட்டுனர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு கல்வித் தகுதியும் வரையறுக்கப்பட்டு உள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருப்பதாக கூட்டுறவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் https://www.drbkak.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து வருகின்றனர்.

விற்பனையாளர் (Salesman) பதவிக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.150 மற்றும் கட்டுநர் (Packer) பதவிக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com