அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

2026-27-ம் கல்வி ஆண்டில் இளங்கலை முதலாம் ஆண்டில் சேர மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
Published on

சென்னை,

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2026-27-ம் கல்வி ஆண்டில் இளங்கலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டில் சேர மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு www.tngasa.in என்ற இணையதளத்தில் மே 7 (இன்று) முதல் 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இணையதள வசதி இல்லாத மாணவர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக, அனைத்து அரச கலை, அறிவியல் கல்லூரிகளிலும் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் ரூ.50. எஸ்சி, எஸ்டி மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் (ரூ.48) செலுத்த தேவையில்லை. பதிவுக் கட்டணம் ரூ.2 மட்டும் செலுத்தினால் போதும். கட்டணங்களை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங் கிங், யுபிஐ மூலம் ஆன்லைனில் செலுத்தலாம்.

தமிழகம் முழுவதும் மொத்தம் உள்ள 181 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப் பிரிவுகளில் 1.27 லட்சம் இடங்கள் உள்ளன. மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியில் விருப்பப்பட்ட பாடப் பிரிவுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்​லூரிக் கல்வி ஆணை​யர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com