

ராசிபுரம்:
ராசிபுரம் தாலுகா பட்டணம் கிராமத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் ஆலத்தூர் ஏா உள்ளது. அந்த ஏரி பகுதியை ஆக்கிரமித்து கோவில், வீடுகள் மற்றும் பால் சொசைட்டிகள் கட்டப்பட்டதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. அந்த வழக்கில் 9 வீடுகள், 3 பால் சொசைட்டிகள் மற்றும் ஒரு விநாயகர் கோவிலை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்திரவிட்டது. அதன்பேரில் நேற்று தாசில்தார் கார்த்திகேயன், பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு உதவி செயற்பொறியாளர் மற்றும் போலீசார் முன்னிலையில் கோவில், பால் சொசைட்டிகள், வீடுகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.