முன்விரோத தகராறில் கோஷ்டி மோதல்; 2 பேர் கைது

தவளக்குப்பம் அருகே முன்விரோத தகராறில் கோஷ்டி மோதலில் ஈடுப்பட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
முன்விரோத தகராறில் கோஷ்டி மோதல்; 2 பேர் கைது
Published on

தவளக்குப்பம்

தவளக்குப்பம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 35). பால் வியாபாரி. இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் அவரது சகோதரி கவிதாவுக்கும் சொத்து பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்தநிலையில் பாஸ்கர் வீட்டுக்கு அவரது மனைவி ராஜலட்சுமியின் சகோதரி வேம்பு வந்திருந்தார். அவரிடம் கவிதாவும், அவரது கணவர் சந்திரசேகரும் தகராறு செய்துள்ளனர். மேலும் பாஸ்கர் வீட்டில் வைத்திருந்த பூச்செடிகளை அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது. பதிலுக்கு பாஸ்கர் தரப்பினரும் சந்திரசேகரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து ராஜலட்சுமி மற்றும் கவிதா ஆகியோர் தவளக்குப்பம் போலீசில் தனித்தனியாக புகார் அளித்தார். அதன்பேரில் சந்திரசேகர், கவிதா, அவரது அக்கா கமலா, பிரபாவதி மற்றும் பாஸ்கர், வேம்பு ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சந்திரசேகர், பாஸ்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com