தந்தை, மகள் படுகாயம்

கடலூர்-பாண்டி ரோட்டில் புதுச்சேரி நோக்கிசென்ற மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் தந்தை, மகள் படுகாயம் அடைந்தனர்.
தந்தை, மகள் படுகாயம்
Published on

பாகூர்

கன்னியக்கோவில் அடுத்த சுள்ளியாங்குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 60). சம்பவத்தன்று சொந்த வேலை காரணமாக வேலாயுதம் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளில் தனது மகள் பானுப்பிரியாவுடன் கடலூர்-பாண்டி ரோட்டில் புதுச்சேரி நோக்கிசென்று கொண்டிருந்தார். கன்னியக்கோவில் அருகே சென்றபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த வேலாயுதம், பானுப்பிரியா ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு கடலூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com