கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
Published on

கரூர்
வாங்கல் மேலசக்கர பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மனைவி துர்கா (வயது 36). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சமீப காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட துர்கா, கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் துர்கா அப்பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து துர்காவின் உடலை மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து துர்கா என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com