மின்னல் தாக்கி பலியான 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி

மின்னல் தாக்கி பலியான 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவிக்கான காசோலையை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
மின்னல் தாக்கி பலியான 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி
Published on

விருதுநகர்,

விருதுநகரில் கடந்த 13-ந்தேதி மின்னல் தாக்கி உயிரிழந்த கட்டுமான தொழிலாளர்கள் ஜெயசூர்யா, முருகன், கார்த்திக் ராஜா மற்றும் ஜக்கம்மாள் ஆகியோரின் குடும்பத்தினரிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிவாரண நிதி தலா ரூ.2 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின் போது ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ., கலெக்டர் மேகநாதரெட்டி, திட்ட இயக்குனர் திலகவதி, விருதுநகர் நகராட்சித்தலைவர் மாதவன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com