அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை

நெடுங்காடு தொகுதியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடைகளை அமைச்சர் சந்திரபிரியங்கா இன்று வழங்கினார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை
Published on

நெடுங்காடு

நெடுங்காடு தொகுதியில் பல்வேறு அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள், சீருடை, நோட்டு, புத்தகங்களை புதுச்சேரி போக்குவரத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா இன்று வழங்கினார். பொன்பேத்தி அரசு நடுநிலைப் பள்ளி, வடமட்டத்தில் அமைந்துள்ள அரசு தொடக்கப் பள்ளி, புனித தெரசா அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, விலையில்லா சைக்கிள், நோட்டு, புத்தகம், சீருடை மற்றும் தையற்கூலி ஆகியவை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அதிகாரி ராஜசேகரன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதுபோல காரைக்கால் மாவட்ட கல்வித்துறை சார்பில், நெடுங்காடு தொகுதிக்கு உட்பட்ட கோட்டுச்சேரிபேட் ஜீவா நகர் அரசு தொடக்கப்பள்ளியில், புதிய ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா, மாணவ - மாணவிகள் பெற்ற விருதுகளுக்குப் பாராட்டு விழா மற்றும் பள்ளிச் சீருடை புத்தகம், விளையாட்டுப் பொருட்கள் வழங்கும் விழா என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா தலைமை தாங்கி ஸ்மார்ட் வகுப்பை திறந்து வைத்து சீருடைகளை வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com