பவுர்ணமி பூஜை

திரளான பக்தர்கள் பங்கேற்ற பவுர்ணமி பூஜை நடந்தது
பவுர்ணமி பூஜை
Published on

புளியங்குடி:

புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் அமைந்துள்ள முப்பெரும் தேவியர் பவானியம்மன் ஆலயத்தில் பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், பாலநாகம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது. இதையொட்டி 21 வகையான அபிஷேகங்களும், 1008 லிட்டரில் சிறப்பு பால் அபிஷேகமும் நடந்தது. சிறப்பு அன்னதானம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com