

மருத்துவ உபகரணங்களில் நடக்கும் தில்லுமுல்லுகளை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் பேட்டரி படத்தில், காதலை ஏற்க மறுத்த காதலனை நினைத்து காதலி பாடுகிறாள். அவள் பாடலை கேட்டு காதலனும் இணைந்து பாடுகிறான்.
நொடிக்குள் மனம் எங்கோ போகிறதே...என்னில் ஏதோ ஆனது நீதானே...காதலே நீதானே என்று தொடங்கும் அந்தப் பாடலை சித்தார்த் விபின் இசையில், ஜீ.வி.பிரகாஷ்குமார், சக்திஸ்ரீ ஆகிய இருவரும் பாடினார்கள்.