தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
Published on

லாஸ்பேட்டை

புதுவை கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 40). கூலித்தொழிலாளி. அவரது மனைவி சரண்யா. சீனிவாசன் மதுபோதைக்கு அடிமையானார். இதையடுத்து அவரை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து குடும்பத்தினர் சிகிச்சை அளித்தனர். இதனால் மனம் திருந்திய அவர் சென்னையில் தங்கியிருந்து ஓட்டலில் வேலைபார்த்து வந்தார். மாதம் ஒரு முறை புதுவைக்கு வந்து செல்வது வழக்கம்.

புத்தாண்டுக்கு புதுவை வந்த அவர் இங்கேயே தங்கி வேறு வேலை தேடுவதாக மனைவியிடம் தெரிவித்தார். இதற்காக அவர் பல்வேறு இடங்களில் வேலை தேடியும் கிடைக்கவில்லை. இதில் மனமுடைந்த சீனிவாசன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com