தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

குடிப்பழக்கத்தால் மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் தொழிலாளி துக்குப்போட்டு தற்கொலை,
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
Published on

திருபுவனை

திருபுவனை அருகே உள்ள ஆண்டியார்பாளையம் மாங்குப்பம் ரோட்டை சேர்ந்தவர் உத்திரவேல் (வயது 44). கூலித்தொழிலாளி. அவரது மனைவி பிரபா (40). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். உத்திரவேலுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் பிரபா கோபித்து கொண்டு தனது குழந்தைகளுடன் புதுவையில் தங்கியுள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று வீட்டின் மரச்சட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com