மது குடித்தவர் சாவு

புதுச்சேரியில் அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் இறந்தார்.
மது குடித்தவர் சாவு
Published on

புதுச்சேரி

புதுவை கொசப்பாளையம் கருணாகரபிள்ளை வீதியை சேர்ந்தவர் அரி (வயது 53). இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். நேற்று கொசப்பாளையம் சுபாஷ் சந்திரபோஸ் வீதியில் அரி அளவுக்கு அதிகமாக மதுகுடித்து இறந்து கிடந்தார். அவரது உடலை உருளையன்பேட்டை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com