மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நேற்று காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம்
Published on

கடல் சீற்றத்தால் ராட்சத அலைகளில் படகுகள் அடித்து செல்லாத வகையில் மாமல்லபுரம் மீனவர்கள் தங்கள் படகுகளை கரைப்பகுதியில் இருந்து 50 மீட்டர் தொலையில் கயிறு கட்டி பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்ததை காண முடிந்தது.

மேலும் நேற்று மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள் மூடப்பட்டிருந்தன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com