ரஜினிகாந்த் நடிக்க விரும்பியதை பெருமையாக கருதுகிறேன் - நடிகர் சரத்குமார்

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்க ஆசைப்பட்ட வேடத்தில் நடித்த அனுபவம் பற்றி சரத்குமார் கூறினார்.
ரஜினிகாந்த் நடிக்க விரும்பியதை பெருமையாக கருதுகிறேன் - நடிகர் சரத்குமார்
Published on

கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின் செல்வன்". இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

"பொன்னியின் செல்வன்" படத்தில் இடம்பெறும் பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்க ஆசைப்பட்டதாகவும், இதற்காக அவர் இயக்குனர் மணிரத்னத்தை நேரில் சந்தித்து தனது விருப்பத்தை தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.

தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க ரஜினி விருப்பம் தெரிவித்த அந்த வேடத்தில் சரத்குமார் நடித்திருக்கிறார். பழுவேட்டரையர் வேடத்தில் நடித்த அனுபவம் பற்றி சரத்குமார் கூறியதாவது:- "பழுவேட்டரையர் 64 விழுப்புண்களை பெற்ற மாவீரர். பொன்னியின் செல்வன் கதையை படிக்கும்போதே பெரிய பழுவேட்டரையர் வேடத்தில் நடிப்பது யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

அந்த வாய்ப்பை எனக்கு அளித்த இயக்குனர் மணிரத்னத்துக்கு நன்றி. அந்த வேடத்தில் யாரெல்லாம் நடிக்க ஆசைப்பட்டார்கள் என்று தெரியாது. ரஜினிகாந்த் நடிக்க விரும்பியதை பெருமையாக கருதுகிறேன்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com