இந்த கூட்டணிக்காக நீண்ட நாட்களாக காத்திருக்கிறேன் - நடிகர் அல்லு அர்ஜுன்

நடிகர் அல்லு அர்ஜுன் ‘புஷ்பா -2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து இவர் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த கூட்டணிக்காக நீண்ட நாட்களாக காத்திருக்கிறேன் - நடிகர் அல்லு அர்ஜுன்
Published on

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.

இதைத்தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அல்லு அர்ஜுன் நடிக்கும் அடுத்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

'ராதே ஷ்யாம்' உள்ளிட்ட படங்களை தயாரித்த பூஷன் குமார் இந்த படத்தை தயாரிக்கவுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை நடிகர் அல்லு அர்ஜுன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், "இந்த கூட்டணிக்காக நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருக்கிறேன். சந்தீப் ரெட்டி வாங்காவின் மந்திரம் தனிப்பட்ட முறையில் என்னைத் தொடும் ஒன்று. நெடுங்காலமாக நினைவில் நிற்கும் ஒரு படத்தை தருவோம் என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com