மாவட்ட செய்திகள்
ஓசூரில் 250 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று கரைப்பு 1,300 போலீசார் பாதுகாப்பு
ஓசூரில் 250 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்கப்பட்டன. இதையொட்டி 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில் இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 200-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டன.

