கோவில்பட்டியில் மது விற்றவர் கைது

கோவில்பட்டியில் மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டியில் மது விற்றவர் கைது
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ் கண்ணன், சிவராஜா ஆகியோர் மந்தித்தோப்பு பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அங்குள்ள பொன் மாடசாமி கோவில் அருகில் கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த ராமசாமி மகன் பொன்ராஜ் (வயது 37) சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்ததை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 9 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.1,700ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com